Map Graph

இசை மற்றும் நிகழ்த்துக் கலைகளுக்கான மண்டல சிறப்பு மையம்

இந்தியாவின் நாகாலாந்திலுள்ள பண்பாட்டு மையம்

இசை மற்றும் நிகழ்த்துக் கலைகளுக்கான மண்டல சிறப்பு மையம் இந்தியாவின் நாகாலாந்து மாநிலத் தலைநகரமான கோகிமா மாவட்டத்தில் உள்ள இயோட்சோமாவில் அமைந்துள்ளது. 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கான இச்சிறப்பு மையம் 2013 ஆம் ஆண்டு நாகாலாந்தின் முதலமைச்சரால் முறையாகத் திறந்து வைக்கப்பட்டது. பண்பாட்டு மையமான இந்த மையத்தில் பல்நோக்கு மண்டபம் மற்றும் சமகால கலைகளின் காட்சியறை போன்றவை உள்ளன. கலைஞர்கள் தங்கள் கலைகளை காட்சிப்படுத்தவும் விற்கவும் இம்மையம் உதவுகிறது.

Read article